இலங்கை முகாமில் உள்ள அகதிகள் உணவு, குடிநீர், மருந்து இன்றி தவித்து வருவதாக புதன்கிழமை தனுஷ்கோடி வந்த அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாமில் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் முல்லைத் தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கராஜ் (80), இவரது மனைவி சிவமணி (69), மருமகன் கிறிஸ்டின் ராஜ்குமார் (31), இவரது மனைவி சந்திரகலா (31), பேரன் இளங்கதிர் (3) ஆகிய 5 பேரும் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ராமேசுவரத்திற்கு படகில் புறப்பட்டனர்.
இவர்கள் மே 31-ம் தேதி இரவு தனுஷ்கோடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள 5-ம் தீடையில் இறக்கிவிடப்பட்டனர். 3 தினங்களாக உணவு, குடிநீர் இன்றி தீடையில் பரிதவித்த இவர்களை இந்தியக் கடற்படையினர் ஜூன் 3-ம் தேதி காலை மீட்டனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாமில் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் முல்லைத் தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கராஜ் (80), இவரது மனைவி சிவமணி (69), மருமகன் கிறிஸ்டின் ராஜ்குமார் (31), இவரது மனைவி சந்திரகலா (31), பேரன் இளங்கதிர் (3) ஆகிய 5 பேரும் தலைமன்னார் கடற்கரையில் இருந்து ராமேசுவரத்திற்கு படகில் புறப்பட்டனர்.
இவர்கள் மே 31-ம் தேதி இரவு தனுஷ்கோடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள 5-ம் தீடையில் இறக்கிவிடப்பட்டனர். 3 தினங்களாக உணவு, குடிநீர் இன்றி தீடையில் பரிதவித்த இவர்களை இந்தியக் கடற்படையினர் ஜூன் 3-ம் தேதி காலை மீட்டனர்.
Comments